அதிமுகவினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய கிராமத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் சென்ற அதிமுகவினரின் வாகனங்கள் மீது கிராம மக்கள் கல் வீசித் தாக்குதல்நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக மாணவர் அணி செயலாளர் சுரேஷ் குமார், சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிஅதிமுகவில் சேர்ந்த கருணாநிதி உள்ளிட்ட அதிமுகவினர் கார்களில் விளாத்திகுளம் சென்றனர்.
கொடியங்குளம் பகுதியை அவர்களது வாகனங்கள் நெருங்கியபோது, காரில் பொருத்தியிருந்த மைக் மூலம்பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம்என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிமுகவினர் தொடர்ந்து மைக் மூலம் பிரசாரம் செய்துள்ளனர். மேலும்,கார்களில் வைத்திருந்த உருட்டுக் கட்டைகள் போன்ற ஆயுதங்களையும் காட்டி கிராமத்தினரை மிரட்டியதாகத்தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிமுகவினரின் கார்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் காரில்பொருத்தப்பட்டிருந்த மைக் உடைந்தது. 3 அதிமுகவினர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் படை அங்கு விரைந்தது. பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கும் பொருட்டு போலீஸார்அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.