கட்டப் பஞ்சாயத்துகளை தடை செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கட்டப் பஞ்சாயத்துகளைத் தடை செய்ய அரசு முயற்சி செய்யும் என்று நம்புவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகற்பகவிநாயகம் கூறியுள்ளார்.

திருச்சி, வலையப்பட்டியை சேர்ந்த சாந்தி, தனது கணவர்,- மாமியார் கொடுமை தாங்காமல், விவாகரத்து கேட்டுதனது கணவர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து வலையப்பட்டி பஞ்சாயத்தில்ராஜேந்திரன் புகார் செய்தார்.

பஞ்சாயத்தார் சாந்திக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததோடு, பஞ்சாயத்தார் முன்பு பல முறை அவரைக் காலில் விழவைத்தனர். ஒவ்வொரு முறையும் காலில் விழுந்தபோது அபராத பணத்தைக் குறைத்து, இறுதியில் ரூ.19,058அபராதம் விதித்தனர். 2 குழந்தைகளையும் ராஜேந்திரனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்கள்.

இது குறித்து திருச்சி போலீசில் புகார் செய்தார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் சாந்தி வழக்குத்தொடுத்தார். இதனையடுத்து முன் ஜாமீன் கோரி கணவர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்தைச் சேர்ந்த 12 பேர்கும்பலும் மனு செய்தனர்.

இந்த வழக்கில் சாந்திக்கு குடும்ப நல நீதிமன்றம் மூலம் விவாகரத்து தருவதாகவும், 2 குழந்தைகளுக்கும் மாதம்தலா ரூ. 2 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்கவும், குழந்தைகளின் மேல் படிப்புக்கு 30 சதவீதம் பணம் உயர்த்தித்தருவதாகவும் ராஜேந்திரன் ஒப்புக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கற்பக விநாயகம் கூறுகையில், கட்டப் பஞ்சாயத்தில் உள்ளாட்சி தலைவர்களும்,அரசு ஊழியர்களும் தலையிடக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க தமிழகஅரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+