தர்மபுரி மோதல்: அமைச்சர் மீது வழக்கு பதிவு
தர்மபுரி:
தர்மபுரியில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அமைச்சர்அன்பழகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரியில் திமுக தலைவர் கருணாநிதி பேசுவதாக இருந்த மைதானத்திற்கு அருகே உள்ள வீடுகளில்திமுகவினரின் சுவர் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. கருணாநிதியின் பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு சிலநிமிடங்கள் முன்பு அங்கு வந்த அதிமுகவினர், திமுகவினரின் விளம்பரங்களை அழித்து விட்டு தங்களதுவிளம்பரங்களை வரைந்தனர்.
இது தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை மூண்டது. இதைக்கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக் விரைந்து வந்துஅவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.
இந் நிலையில் மோதல் தொடர்பாக அமைச்சர் அன்பழகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications