For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூர்த்தியின் கார் மீது கல்வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருப்போரூர் அருகே பா.ம.க. வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியின் பிரச்சார அணிவகுப்பின் மீதுகல்வீச்சுத் தாக்குதல் நடந்தது.

செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சரான மூர்த்தி, திமுக உள்ளிட்டகூட்டணிக் கட்சியினருடன் திருப்போரூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

சந்தானம்பட்டு பகுதியில் இவர்களது கார்கள் சென்றபோது சிலர் கற்களை வீசித் தாக்கினர். இதில்ஏ.கே. மூர்த்தியின் கார் விநாடியில் தப்பிவிட, பின்னால் வந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன.அதில் இருந்த திமுகவினர் காயமடைந்தனர்.

இதையடுத்து போலீசில் மூர்த்தி புகார் தர, உடனடியாக அவரது பிரச்சாரத்துக்கு பாதுகாப்புவழங்கப்பட்டது.

இத் தாக்குதலை ரஜினி ரசிகர்கள் நடத்தினார்களா அல்லது வேறு யாராவது நடத்தினார்களா என்றுதெரியவில்லை.

ரஜினி மீது வழக்கு?

இதற்கிடையே ரஜினிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பாலு கூறியதாவது:

தனிப்பட்ட முறையில் ராமதாஸை ரஜினி தரக்குறைவாகத் தாக்கிப் பேசியுள்ளார். வன்முறையின்ராஜா என்றும் கூறியுள்ளார். மேலும் ராமதாஸால் தான் நல்லவர்கள் அரசியலுக்கு வரபயப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

இது தேர்தல் ஆணையம் கூறிய அறிவுரைக்கு முரணானது. தனிப்பட்ட முறையில் அரசியல்தலைவர்களைத் தாக்கிப் பேசக் கூடாது என்று கூறியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவுதெரிவிப்பதற்காக ரஜினி, ராமதாஸை மிகவும் கொஞ்சையாக தாக்கிப் பேசியது தேர்தல் நடத்தைவிதிமுறைகளுக்கு எதிரானது.

இதனால் ராதாசின் புகழுக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து தேர்தல்ஆணையத்திடம் முறையிடுவோம். ராமதாசின் அனுமதி கிடைத்தவுடன் இது தொடர்பாகநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X