காங்கேயம் அதிமுக எம்எல்ஏவின் மருமகன் படுகொலை
ஈரோடு:
காங்கேயம் அதிமுக எம்எல்ஏ செல்வி முருகேசனின் மகளை காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார்.
செல்வி முருகேசனின் உதவியாளராக இருந்தவர் தாராபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் (25). இவருக்கும்என்ஜீனியரிங் 3ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த, எம்.எல்.ஏவின் மகள் கவிதாவுக்கும் (22) இடையே காதல்மலர்ந்தது. இந்தக் காதலுக்கு எம்.எல்.ஏ வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.
எதிர்ப்பையும் மீறி கவிதாவை அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் இவர்களுக்கு கொலைமிரட்டல் வந்தது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும்மிரட்டல் தொடர்ந்தவண்ணம் இருந்ததால் கடந்த 1 வருடமாக இவர்கள் இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.
இருவரும் ஒரு விடுதியில் தங்கி மேல் படிப்பு படித்து வந்ததாகத் தெரிகிறது. இந் நிலையில் இருவரும் விடுதியில்இருக்கும்போது, ஒரு கும்பல் மாருதி வேனில் வந்து கவிதாவின் கண் முன்னால் சிவக்குமாரைக் கடத்திச்சென்றுள்ளது.
ஓசூர் அருகே அத்திபட்டு என்ற இடத்தில் சிவக்குமார் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்த அக்கும்பல் உடலை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியது.
இந் நிலையில் கணவர் கடத்தப்பட்டது குறித்து கவிதா தந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கியபெங்களூர் போலீசாருக்கு ஒசூர் பகுதியில் சிவக்குமாரின் உடல் கிடப்பது தெரியவந்தது.
சிவக்குமாரின் உடல் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பாக தாராபுரத்தில் உள்ள சிவக்குமார் வீட்டிலும், எம்எல்ஏ செல்வி முருகேசனிடமும் தனிப்படைபோலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.