சென்னையில் வாஜ்பாய் - ஜெ. கூட்டு பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அடுத்த மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாயும்முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொண்டு பேசுகினறனர்.

அகில இந்திய பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் 5ம் தேதியில் ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்வது குறித்து பிரதமரின்அலுவலக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால் சென்னையில் எந்த இடத்தில் இந்தக் கூட்டத்தை நடத்துவதுஎன்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னைக் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவேண்டும். உண்மையைக் கண்டுபிடிக்க இந்திய போலீஸாருக்கு அவர் உதவ வேண்டும்.

அயோத்தி கோவில் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பாஜகவைத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.நாங்கள் எங்களது செயல்திட்டத்தில், அயோத்திப் பிரச்சனை நீதிமன்றம் மூலமாகவோ, பேச்சுவார்த்தைமூலமாகவோ சுமூகமாக தீர்க்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

இப்போது பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்அயோத்தியில் ராமர் கட்டுவது உறுதி.

அயோத்திப் பிரச்சனை காரணமாக திமுக அமைச்சர்கள் யாரும் பதவி விலகவில்லை. காங்கிரசுடன் கூட்டணிஅமைப்பதற்காகவே கூட்டணியிலிருந்து விலகினார்கள் என்றார் இல.கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+