மக்களுக்காக தினம் 20 மணி நேரம் உழைக்கிறேன்: ஜெயலலிதா
தஞ்சாவூர்:
மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் தங்கமுத்துவை ஆதரித்து அவர் பேசியதாவது:
உங்கள் அன்புச் சகோதரியான எனக்கு கடந்த தேர்தலில் அமோக ஆதரவளித்து முதலமைச்சர்ஆக்கினீர்கள். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருவதோடு,தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது தான் இமயம் முதல் குமரி வரை இப்போது கேட்கப்படும்கேள்வி. 100 கோடி இதயங்களில் இருக்கும் வாஜ்பாய் பிரதமராக வேண்டுமா?. அரை வேக்காடுசோனியா பிரதமராக வேண்டுமா?
இந்தியாவில் பிறந்தவர் நாட்டை ஆள வேண்டுமா? விசுவாசமில்லாத சோனியா ஆள வேண்டுமா?மண்ணின் மைந்தர் வாஜ்பாய் தான் பிரதமராக வேண்டும்.
உங்களுக்காக நான் தினமும் 20 மணி நேரம் உழைக்கிறேன். தமிழகத்தை முதன் மாநிலமாகஆக்குவதற்கு அடுத்து என்ன செய்யலாம் என்பதே எப்போதும் என் சிந்தனையாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications