For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழனிக்கு நேரம் சரியில்லை!

By Staff
Google Oneindia Tamil News

பழனி:

இழுவை ரயில் பெட்டி கழன்று விழுந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மேலும் ஒரு அசம்பாவிதம் பழனிமலைக் கோவிலில் நிகழ்ந்துள்ளது. மலை உச்சியில் கட்டப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள கோவில் மணியின்இரும்புக் கயிறு அறுந்து மணி கழன்று விழுந்தது.

பழனி முருகன் கோவிலின் உச்சியை அடைய அடிவாரத்திலிருந்து மலைக்கு இழுவை ரயில்கள்இயக்கப்படுகின்றன. இந்த இழுவை ரயிலின் ஒரு பெட்டி சமீபத்தில் அறுந்து விழுந்தது. இதில் 32 பேர்காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த கையோடு மேலும் ஒரு சம்பவம் நடந்து பக்தர்கள் மனதில் பீதியைஏற்படுத்தியுள்ளது. மலைக் கோவிலின் உச்சியில் பிரமாண்டமான மணி கட்டப்பட்டுள்ளது. இந்த மணி 25 கிலோஎடையுள்ள இரும்புக் கயிறு மூலம் தொங்க விடப்பட்டுள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று கோவில் மணி காலை முதலே ஒலித்துக் கொண்டிருந்தது. இந் நிலையில் திடீரென்றுஇரும்புக் கயிறு அறுந்ததால், கோவில் மணி அப்படியே விழுந்தது. இருப்பினும் கோவில் மணி இருந்த இடத்தில்,பாதுகாப்பு கேட் இருந்ததால் மணி வெளியே வரவில்லை.

அடுத்தடுத்து இரண்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது பழனி கோவில் பக்தர்களின் மனதில் கிலேசத்தைஉண்டாக்கியுள்ளது. என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X