தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்
சென்னை:
தமிழகதிலும் புதுவையிலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் புதன்கிழமைதொடங்குகிறது.
தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் 181 நாடாளுமன்றத் தொகுதிகளில் மே 10ம் தேதி வாக்குப் பதிவுநடக்கிறது. மொத்தம் 5 கட்டமாக நடக்கும் தேர்தலில் கடைசி கட்டமாக தமிழகத்திலும் புதுவையிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நாடு முழுவதும் 3 கட்டத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து விட்டது. நான்காவது கட்டத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 16ம் தேதி முதல் 5வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மனுக்களைதாக்கல் செய்ய 23ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் பரிசீலனை 24ம் தேதி நடைபெறும்.
26ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். வாக்குப் பதிவு மே 10ம் தேதி நடைபெறும். நாடுமுழுவதும் வாக்கு எண்ணக்கை 13ம் தேதி நடக்கும். அன்றே முடிவுகளும் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications