பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம்
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறதுஎன்று அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி கூறினார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 240 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. அண்ணா பல்கலைக் கழகம் 4வருடங்களுக்கு ஒரு முறை புதிய பாடத்திட்டத்தை மாற்றுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வழங்கப்பட உள்ளது.
கட்டிடக்கலை, மெக்கானிக், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யுனிகேசன்ஸ்,தகவல் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம் உள்பட 23 வகையான அனைத்து பாடத்திட்டங்கள்மாற்றப்பட்டுள்ளன.
இதில் நவீன தொழில் நுட்பங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் பொறியியல் படிப்பு படித்து முடித்த பிறகுஅவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த, புரொபஷனல் எதிக்ஸ் என்ற பயிற்சி வகுப்பும்புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த நிர்வாக தன்மை என்ற ஒரு பயிற்சி வகுப்பும் தொடங்கப்பட உள்ளதுஎன்றார்.