புதுக்கோட்டை பிரசாரம்: பாஜகவுக்கு "கட்" சொன்ன ஜெ!
புதுக்கோட்டை:
ஜெயலலிதாவின் புதுக்கோட்டை பிரசாரத்தின்போது பாஜகவினர் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்குகூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கூட அனுப்பப்படவில்லை.
புதுக்கோட்டை தொகுதியை பாஜகவுக்கு (மத்திய அமைச்சர் திருநாவுக்கரரசருக்கு) தர முடியாது என்று ஜெயலலிதாமறுத்து விட்டதால், திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் கடுப்பில் உள்ளனர். திமுக வேட்பாளர் ரகுபதிக்குஆதரவாக அவர்கள் மறைகமாக செயல்பட்டு வருகிறார்கள்.
தொகுதியில் பாஜகவினர் யாரும் வேலை செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களை அணுகி ஆதரவுகேட்கவும் அதிமுக வேட்பாளர் அஞ்சுகிறார். உதவி கேட்கப் போய் அம்மாவின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளஅவர்கள் விரும்பவில்லை.
இந் நிலையில், புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்திற்கு பாஜகவினர்யாரும் அழைக்கப்படவில்லை. அதிமுக மட்டுமே இந்த பொதுக் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
இது குறித்து புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட நகராட்சி தலைவர் திவ்யநாதன் கூறுகையில், திருநாவுக்கரசர்தலைமையில் பாஜகவில் இணைந்த எம்.ஜி.ஆர். விசுவாசிகளை அதிமுக தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
புதுக்கோட்டை பிரசாரத்திற்கும் பாஜகவினர் யாரும் அழைக்கப்படவில்லை, பிரசாரப் பணிகளிலும் பாஜகவைஈடுபடுத்தாமல் தள்ளியே வைத்துள்ளது அதிமுக என்றார்.
அதிமுகவின் தொடர் புறக்கணிப்பையடுத்து பாஜகவினர் தங்களது சொந்த வேலைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். இதனால் துணைக்கு ஆள் இல்லாமல் ஒத்தையாக அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளார். மாறாக, திமுக வேட்பாளர் ரகுபதியோ கூட்டணிக் கட்சிகள் புடை சூழ ராஜா போல பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications