ரஜினி வீட்டில் திடீர் தீ!
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்தின் பண்ணை வீட்டில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமகவினர்இருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே கேளம்பாக்கம், புதுப்பாக்கம் கிராமத்தில் ரஜினிக்குச் சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவில்அமைந்த பண்ணை வீடு உள்ளது. தனிமை விரும்பியான ரஜினி அடிக்கடி இந்த வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பார்.பட விவகாரங்கள் குறித்தும் இங்குதான் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
இந் நிலையில் பண்ணை வீட்டின் படுக்கை அறையில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 3 லட்சம்மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்துக் கேள்விப்பட்டதும் ரஜினிகாந்த் விரைந்து வந்தார்.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரஜினி கூறியுள்ளார். இருப்பினும் இதன் பின்னர்பாமகவினர் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில்ரஜினி வீட்டுக் காவலாளி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications