வாஜ்பாயின் கர்நாடக பேச்சு: ஜெவுக்கு ராமதாஸ் கேள்வி
சென்னை:
காவிரிப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும் என்று கர்நாடகத்தில் நடந்த தேர்தல்பிரசாரத்தின்போது பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதற்கு ஜெயலலிதா என்ன கருத்துக் கூற விரும்புகிறார் என்றுபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்,வாஜ்பாய் பேசுகையில், காவிரிப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே சிறந்த தீர்வு காண முடியும் என்றுகூறியுள்ளார்.
ஆனால் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். வாஜ்பாயுடன்கூட்டணி வைத்துள்ள ஜெயலலிதா, கர்நாடகத்தில் வாஜ்பாய் பேசியுள்ளது குறித்து என்ன கூற விரும்புகிறார்என்பதை அறிய விரும்புகிறேன்.
காவிரி நடுவர் மன்றத்தையேக் கலைத்து விட வேண்டும் என்று கூறியவர் ஜெயலலிதா. இப்போது உச்ச நீதிமன்றம்வரை அவர் சென்றுள்ளார். ஆனால் பேச்சுதான் பிரச்சினைக்குத் தீர்வு என்று வாஜ்பாய் கூறுகிறார். இதற்குஜெயலலிதா என்ன பதில் சொல்லப்போகிறார்?
மே 5ம் தேதி ஜெயலலிதாவும், வாஜ்பாயும் சென்னையில் ஒரே மேடையில் பேசப் போகிறார்கள். அப்போதுவாஜ்பாய் பேசியது தவறு என்று ஜெயலலிதாவால் மறுத்துப் பேச முடியுமா? அந்த தைரியம் அவருக்கு உள்ளதா?அல்லது தனது பேச்சை வாபஸ் வாங்கினால்தான் கூட்டத்திற்கு வர முடியும் என்று பாஜகவினரிடத்தில்ஜெயலலிதாவால் சொல்லத்தான் முடியுமா? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications