திமுக வழக்கை சந்திக்க தயார்: ஏ.சி.சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்கத் தயார் என்று புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.

கடந்த 7ம் தேதி சென்னை மெரீனா கடற்கரை அருகே தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை ஏ.சி.சண்முகம்தொடங்கினார். அவரது பிரசாரத்தை ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய ஏ.சி.சண்முகம் திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஏ.சி.சண்முகம் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவதூறு வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் ஏ.சி.சண்முகம் பேசுகையில்,

திமுக தொடர்ந்துள்ள வழக்கை கண்டு நான் பயந்து விடவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன். உள்ளகருத்தைத்தான் நான் அன்று கூறினேன். அது அவதூறாகவோ, தவறாகவோ இல்லை என்பது எனது நிலைப்பாடு.

புதிய நீதிக் கட்சிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும். இது தொடர்பாக விரைவில் ரஜினியை நேரில் சந்தித்துஆதரவு கேட்பேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+