கந்துவட்டி: ஒரே மின் விசிறியில் இருவர் தற்கொலை
திருச்சி:
கந்து வட்டிக் கும்பலால் மிரட்டப்பட்ட உறவினர்கள் இருவர் ஒரே மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் ஹரீஸ் (22), பாபு பாலாஜி (24). இவர்கள் இருவரும் சித்தப்பா, பெரியப்பா மகன்கள் ஆவார். இருவரும் சேர்ந்து கோவை அரசு பொறியியல் கல்லூரி அருகே சி.டி, கேசட் விற்கும் கடை நடத்தி வந்தனர்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை சமாளிக்க கேந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கினர். ஆனால் தொழில் சரியாக நடக்கவில்லை. இந் நிலையில் கடன் கொடுத்த கந்து வட்டிக் கும்பல் மிரட்ட ஆரம்பிக்கவே கடந்த 24ம் தேதி கடையைப் பூட்டி விட்டு, வெளியூர் போவதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பினர்.
இந் நிலையில் இருவரும் திருச்சியில் ஒரு லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே மின்விசிறியில் தூக்குப் போட்டு தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்.
கோவையில் இருக்கும் இருவரது பெற்றோருக்கும் தகவல் அனுப்பினர். தகவல் கிடைத்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்தனர். சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications