பஸ்கள் மீது கல்வீச்சு வழக்கு: வீரபாண்டி ஆறுமுகம் விடுவிப்பு
சேலம்:
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அரசு பஸ்களைச் சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்டவழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 11 திமுகவினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.
2001ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து ஜூலை2ம் தேதி திமுகவினர் மாநிலம் முழுவதும் கடையடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சேலம்கொண்டாலம்பட்டியில் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், அரசு பஸ்களைச் சேதப்படுத்தியதாகவும் வீரபாண்டிஆறுமுகம் உள்ளிட்ட 11 திமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் வேணுகோபால், குற்றம் சரிவரநிரூபிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக இன்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்புக்குப் பின் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், அதிமுக அரசுதொடர்ந்தது பொய் வழக்கு என்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது. க்மிழக அரசின் எத்தகையஅடக்குமுறைகளையும் தூள் தூளாக்குவோம் என்று கூறினார்.
வழக்கிலிருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டதும், சேலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்தங்கபாலு தனது ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்துக்கு வந்து ஆறுமுகத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications