வீரப்பன் கூட்டாளி பிடிபட்டான்
சேலம்:
வனக் காவலர்கள் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளியான கோவிந்தராஜ் என்பவரை அதிரடிப்படை போலீஸார்பிடித்துள்ளனர்.
கடந்த 1989ம் ஆண்டு பர்கூர் வனப் பகுதியில், 2 வனக் காவலர்களும் அவர்களது உதவியாளர் ஒருவரும் வீரப்பன் கும்பலால்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வீரப்பன் உள்ளிட்டோர் மீது பர்கூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் 4வது குற்றவாளியாக கோவிந்தராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். இந் நிலையில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தஅதிரடிப் படையினருக்கு, கோவிந்தராஜ் இருக்கும் இடம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்றுகோவிந்தராஜைக் கைது செய்தனர்.
பின்னர் பர்கூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கோவிந்தராஜைப் பிடிக்க உதவியகிராமத்தினர் இருவருக்கு, அதிரடிப்படைத் தலைவரும், கூடுதல் டிஜிபியுமான விஜயக்குமார் பசு வழங்கினார்.












Click it and Unblock the Notifications