அதிமுகவுக்கு உதவிய சென்னை கலெக்டர் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை:
சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்கண்ணுச்சாமியை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஏராளமான வாக்காளர்ளின் பெயர்களை நீக்கியும், பல போலிவாக்காளர்களை சேர்த்தும் பெரும் குளறுபடி நடந்துள்ளது. இதில் அதிமுகவினரின் கைவண்ணம் இருப்பதாக திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியபோது மோசடி நடந்திருப்பது உறுதியானது.
இதையடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், வாக்காளர் பட்டியல்குளறுபடிகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய்சாரங்கிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான கண்ணுச்சாமியை உடனடியாக இடமாற்றம்செய்ய மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சாரங்கி நிருபர்களிடம் பேசுகையில், புதிய கலெக்டர் உடனடியாக நியமிக்கப்படாவிட்டால், முதன்மை உதவிதேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்றார்.