For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் சனியன்?: ஜெயலலிதா மீது இளங்கோவன் கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

அந்தியூர்:

ஜெயலலிதாவுக்கு தோல்வியை பரிசாகத் தருவேன் என்று கோபிச்செட்டிப்பாளையம் காங்கிரஸ் வேட்பாளர்இளங்கோவன் கூறினார்.

திமுக கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் கூட்டம் பவானி-மேட்டூர் சாலையில் உள்ள பழனியப்பா திருமணமண்டபத்தில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன், ஜெயலலிதாவை ஒருமையில் பேசினார்.

அவர் கூறியதாவது:

இந்தியாவில் பல்வேறு பிரதமர்களை உருவாக்கிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதியை சனியன் என்றுசொல்லியிருக்கிறார் கேடுகெட்ட ஜெயலலிதா.

உண்மையில் சனியன் ஜெயலலிதா தான். சாலைப் பணியாளர்கள், தொழிலாளர்கள், ரேசன் கார்டுகளை இழந்தஏழைகள், அரசு ஊழியர்கள், மின்சாரம்- தண்ணீர் இல்லாம் அவதிப்படும் விவசாயிகள், கஞ்சித் தொட்டிகளைஅண்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நெசவாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் பிடித்துள்ள சனியன் நீ(ஜெயலலிதா).

உன்னை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.

நான் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் எனக்குக் கவலையில்லை. நான்பாட்டுக்கு உனக்கு எதிராக அரசியல்பண்ணிக்கிட்டு இருப்பேன்.

ஆனால், என் மீது தனிப்பட்ட வன்மம் கொண்ட ஜெயலலிதா என்னைத் தோற்கடிப்பதற்காக சத்தியமங்கலத்தில்இரண்டு நாள் டேரா போட்டு கோடி, கோடியாய் பணத்தைக் கொட்டி, கூட்டம் கூட்டி, அவர்களிடம் வெற்றி தேடித்தருமாறு கத்திவிட்டுப் போயிருக்கிறார்.

நான் தோற்றால் அது என் தனிப்பட்ட தோல்வி. அதே போல இங்கே அதிமுக வேட்பாளர் தோற்றால் அதுஜெயலலிதாவுக்கு ஏற்படும் தனிப்பட்ட தோல்வியாகவே அமையும்.

அந்தத் தோல்வியை மக்களுடன் சேர்ந்து நான் ஜெயலலிதாவுக்கு பரிசாகத் தருவேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X