செருப்பு ஊழல்: இந்திரகுமாரி மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு எதிரான இலவச செருப்பு ஊழல் வழக்கின் தீர்ப்பு வரும் 22-க்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச செருப்பு வழங்கும் திட்டத்தில் ரூ. 1.19 கோடிக்கு முறைகேடுநடந்திருப்பதாகக் கூறி அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி, காதித் துறை அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி,நிதியமைச்சர் நெடுஞ்செழியன், இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன், பார்த்தசாரதி உள்ளிட்ட 21 பேர் மீதுபோலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக 275 பேர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதிவாணன் இம் மாதம் 7-ம்தேதி தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டிருந்தார்.

அன்றைய தினம் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக தீர்ப்பு 16-ம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.ஆனால் நேற்றும் தீர்ப்பு தயாராகததால் 22-ம் தேதிக்கு அதை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+