தி.கவும் பிரசாரத்தில் தீவிரமாக குதிக்கிறது
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திராவிடர் கழகம் தீவிர பிரசாரத்தில்ஈடுபடவுள்ளது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு கூட்டணியை ஆதரிக்கும் திராவிடர் கழகம் இந்த முறை திமுக தலைமையிலானஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தி.க. தலைவர் கி.வீரமணி, மதவாத பாஜக போட்டியிடும்7 தொகுதிகளிலும் நானே தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்.
இது தவிர திருச்சி, வேலூர் தொகுதிகளிலும் நான் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன். நேரம் கிடைத்தால்மேலும் சில தொகுதிகளில் நான் நேரடியாகப் பிரசாரம் செய்வேன்.
வரும் 25ம் தேதி தொடங்கி 30 வரையிலும் பிரசாரம் செய்வேன். அதன் பிறகு மே 3ம் தேதி தொடங்கி 7ம் தேதிவரை இரண்டாவது கட்டமாக பிரசாரம் செய்வேன்.
மதவாத பாஜகதான் எனது எதிரி. அந்தக் கட்சியின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை. காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியை குறிவைத்து அக்கட்சி பிரசாரம் செய்வது அபத்தமாக உள்ளது. சோனியா காந்தியின்பிறப்பிடம் குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல, அது தேவையும் அல்ல. அவர் இந்தியர்தான் என்பதைஉச்ச நீதிமன்றமே அங்கீகரித்து விட்டதால் அது குறித்து பேசக் கூடாது என்றார் கி.வீரமணி.
பின்னர் இரவு கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார் வீரமணி. அங்குகருணாநிதியை சந்தித்து தி.க.வின் ஆதரவைத் தெரிவித்தார்.