கம்பம்: அதிமுக - திமுக கூட்டணியினரிடையே மோதல்

Subscribe to Oneindia Tamil

கம்பம்:

கம்பம் அருகே திமுக கூட்டணியினரும், அதிமுக கூட்டணியினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.

பெரியகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆருண், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இரவு 11 மணிக்கு சைகை மூலமாகவாக்கு கேட்டார்.

இதற்கு அதிமுக மற்றும் -பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆருண் வந்த காரை மறித்து நிறுத்தி தகராறுசெய்தனர். காரில் கட்டப்பட்டு இருந்த கொடிகளை கிழித்தனர். மேலும் ஆருணையும் தாக்க முயற்சி செய்தனர்.

அதனால் ஆருண் தொடர்ந்து பிரசாரம் செய்யாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இதனைக் கண்ட திமுகவினர் அதிமுககூட்டணியினரை தட்டிக் கேட்டனர். அதனால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. கத்தி, கம்பு, கற்களைக் கொண்டுஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். இதில் இரு தரப்பிலும் 11 பேர் காயம் அடைந்தார்கள்.

முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தின் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டதால் 2 போலீசார் மட்டுமே அங்கு இருந்தார்கள்.அவர்களால் இந்த மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. இது பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையில் போலீஸ் படை விரைந்து வந்தது. அவர்கள்மோதலை அடக்கி இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ரவிக்குமார் (32), செல்வம் (33), அதிமுகவை சேர்ந்த செல்வம் (37),முருகன் (40), கார்மேகம் (48) ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

திமுகவைச் சேர்ந்த ஜெகன்நாதன் (39), சரவணன் (30), கிருஷ்ணன் (35), குபேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்தார்கள். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+