காவல்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணைய ஊழியர்களாக அறிவிப்பு
சென்னை:
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரையிலான அனைவரும்,தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாக செயல்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோடா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, காவல்துறை அதிகாரிகள்அனைவரும் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாக செயல்படுவர்.
இந்தக் காலகட்டத்தின்போது, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள்.
இதன் படி கூடுதல் டிஜிபிக்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மாநகர காவல்துறைஆணையர்கள், வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜிக்கள், கூடுதல் ஐ.ஜிக்கள், காவல்துறைகண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்தல் ஆணையப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.