40 சிறார் போராளிகளை விடுவித்த விடுதலைப் புலிகள்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து மேலும் 40 சிறார் போராளிகளை விடுவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களால் விடுவிக்கப்பட்ட சிறார் போராளிகளின் எண்ணிக்கை 299 ஆகியுள்ளது.
இத் தகவலை புலிகளின் "தமிழ்நெட் இணைய தளம் வெளியிட்டுள்ளது. இப்போது விடுதலைப் புலிகள்விடுவித்துள்ள சிறார் போராளிகளில் 31 பேர் சிறுமிகள்; 9 பேர் சிறுவர்கள் ஆவார்.
கருணா கோஷ்க்கு மன்னிப்பு:
தலைமறைவாகியுள்ள கருணாவின் ஆதரவு கோஷ்டியினருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் புலிகள் இயக்கம்அறிவித்துள்ளது.
இது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு பகுதி புதிய கமாண்டர் தம்பிராஜா ரமேஷ் கூறுயிைல்,கருணாவின் துரோகச் செயல்களுக்குத் துணை போனவர்களை பழி வாங்க மாட்டோம். கருணாவின்கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப் பகுதியில் புலிகளின் போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மீண்டும்அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இதற்கிடையே கருணா கோஷ்டி தலைமறைவான பின்பு அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், வாகனங்களைக்கொள்ளையடித்தவர்கள் உடனே அவற்றை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புலிகள் இயக்கம்எச்சரித்துள்ளது.
கருணாவை கொல்வது உறுதி:
இந் நிலையில் கருணாவை விடுதலைப் புலிகள் கொல்வது உறுதி என்று இலங்கையில் இருந்து வெளியாகும்சண்டே லீடர் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இதழ் கூறியிருப்பதாவது: புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நீலனை கருணா சுட்டுக் கொன்றதன் மூலம்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் அவர் செய்துகொண்டிருந்த ரகசிய ஒப்பந்தத்தை மீறியுள்ளார். எனவே,கருணாவை தேடிக் கண்டுபிடித்து விடுதலைப் புலிகள் கொல்வது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.