பஸ்களில் பா.ம.க... மாட்டு வண்டியில் அதிமுக!
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரும், முன்னாள் மத்திய ரயில்வே இணைஅமைச்சருமான ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தில் கலக்கி வருகிறார்.
செங்கல்பட்டு தொகுதி முழுவதும் சுறுசுறுப்பாக அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். அதிகாலை 5 மணியில் இருந்துபிரசார நேரம் முடியும் இரவு 10 மணி வரை அவரைத் தொகுதியின் ஏதாவது ஒரு மூலையில் பார்க்க முடிகிறது.அதேபோல தினசரி பஸ் நிலையத்திற்கும் வந்து விடுகிறார். அங்கு நிற்கும் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் ஓட்டுசேகரிக்கிறார். ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில் ரயிலாக ஏறி சோதனை நடத்தி இந்தியாவையேகலக்கியவர் இப்போது பஸ் பஸ்ஸாக ஓட்டுக் கேட்டு ஏறுவதை செங்கை மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.மூர்த்தியின் கடும் போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாத அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன், மாட்டு வண்டியில் சென்றுகிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார்.