அழுக்கா இருக்கக் கூடாது.. அதுக்கு தான்..
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் நூற்றக்கணக்கான பெண்களுக்கு சில்வர் குடம், சேலை வினியோகம்செய்தார்.
மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே போஸின் டிராவல்ஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குநூற்றுக்கணக்கான பெண்களை வேன் மூலம் வரவழைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு சில்வர் குடம், ஒரு சேலையைவழங்கினார் போஸ்.
அப்போது முன்னாள் துணை மேயர் நவநீதிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுகவினர் அங்கிருந்தனர். குடம், சேலைவினியோகத்துக்குப் பின் பெண்கள் அதே வேன்களில் திரும்பி அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து போஸிடம் நிருபர்கள் கேட்டபோது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதைஅளிப்பதற்காகவே இந்தப் பெண்களுக்கு குடம் தரப்பட்டது. அவர்கள் அழுக்குத் துணிகளோடு ஜெயலலிதா முன்புநிற்கக் கூடாது என்பதற்காகவே சேலை தரப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications