சோனியா குறித்து அவதூறு: ஜெவுக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி :

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முதல்வர்ஜெயலலிதாவுக்கு திருச்சி முன்சீப் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது சோனியா காந்தி குறித்து ஜெயலலிதா விமர்சனம்செய்திருந்தார். இதை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த செங்கசோலை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை,துரைராஜ், கோவிந்தசாமி ஆகியோர் திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தங்களது மனுவில் சோனியா காந்திக்கு 1984ம் ஆண்டே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு விட்டது. எனவேஅவர் வெளிநாட்டவர் என்று கூற முடியாது. மேலும், உச்ச நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. எனவேசோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று ஜெயலலிதா கூறுவது அவதூறை ஏற்படுத்தும் பேச்சாகும். மேலும்,தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் செயலாகும்.

எனவே ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்தநீதிபதி கலாவதி, மே 21ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்குஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+