For Daily Alerts
Just In
சிவகாசி பட்டாசு விபத்து: பலி 4 ஆக உயர்வு
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆகஉயர்ந்தது.
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி என்ற இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.தொழிற்சாலையில் 32 அறைகள் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 250 ஊழியர்கள்பணியாற்றுகிறார்கள்.
நேற்று இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியானார்கள். காளிமுத்து,முத்தையா, சண்முகம் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் காளிமுத்து இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இதையடுத்து பலியானவர்களின்எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இந்தத் தொழிற்சாலை இயங்கிவந்ததால்தான் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, April 20, 2004, 5:30 [IST]