For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசி பட்டாசு விபத்து: பலி 4 ஆக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆகஉயர்ந்தது.

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி என்ற இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.தொழிற்சாலையில் 32 அறைகள் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 250 ஊழியர்கள்பணியாற்றுகிறார்கள்.

நேற்று இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியானார்கள். காளிமுத்து,முத்தையா, சண்முகம் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களில் காளிமுத்து இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இதையடுத்து பலியானவர்களின்எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இந்தத் தொழிற்சாலை இயங்கிவந்ததால்தான் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X