இந்தியா ஒளிர்கிறதா?: புள்ளி விவரத்துடன் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்!
சிவகங்கை:
மத்திய அரசின் குறைபாடுகளை புள்ளி விவரங்களுடன் எழுதிக் காட்டி நிருபர்களை அசத்தினார் சிவகங்கைதொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை பொதுச் செயலாளர்ப.சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்த பின் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, இந்தியா ஒளிர்கிறது என மத்திய அரசு கூறி வருகிறது. அதை அதிமுக அரசும் ஆமோதித்து வருகிறது.
இதெல்லாம் பொய் என்று கூறிய சிதம்பரம் எழுந்து, தனக்குப் பின்னால் தொங்க விடப்பட்டிருந்த வெள்ளைசார்ட்டில் விறுவிறுவென இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஜிடிபி, உணவு கையிருப்பு, வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளோர் எண்ணிக்கை என விவரங்களை பொருளாதார பேராசிரியராகவே மாறி எழுதி விளக்கஆரம்பித்தார்.
மத்திய அரசு எவ்வளவு செலவு செய்கிறது, இதில் வீண் செலவு என்ன என்பதையும் விரிவாக விளக்கிய சிதம்பரம்,இந்தியா ஒளிர்கிறது என்று யாராவது சொன்னால் அது வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 35 கோடிஇந்தியர்களையும் கேவலப்படுத்தும் அக்கிரமமான செயல் என்றார் ஆவேசமாய்.