சென்னையில் வாஜ்பாய், மோடி பிரசாரம்
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் வருகிற மே 5ம் தேதி சென்னையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மே 5 ம் தேதிபிரதமர் வாஜ்பாய் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுபேசுகிறார்.
மே 6,7 ஆகிய தேதிகளில் துணைப் பிரதமர் அத்வானி தமிழகம் வருகிறார். இரு தினங்களிலும் அவர் சிதம்பரம்,புதுவையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7ம் தேதி நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனைஆதரித்துப் பேசுகிறார். மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி 6ம் தேதி தர்மபுரியில் பிரசாரம் செய்கிறார்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 28ம் தேதி வட சென்னையிலும், நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் 29ம் தேதிகோவை மற்றும் 30ம் தேதி நீலகிரியிலும் பிரசாரம் செய்கிறார்கள்.
வட சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரம் ரத்து செய்யப்படவில்லை. வாஜ்பாய் பிரசாரம்செய்யும்போது ஜெயலலிதாவும் பிரசாரம் செய்யவிருப்பதால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லக்னோ தொகுதியில் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக அவரது நண்பர் ராம்ஜெத்மலானியை காங்கிரஸ் கொம்பு சீவிவிட்டுள்ளது. இதன் மூலம் இருவரின் நட்பையும் பிளவுபடுத்தி உள்ளது காங்கிரஸ்.
கூட்டணி அரசு தொடர்பாக வாஜ்பாய் பேசியதை இங்குள்ள தலைவர்கள் வேறுவிதமாக அர்த்தம் தருகிறார்கள்.இது தவறு. தானே கடைசிவரை தலைமை தாங்க வாஜ்பாய்க்கு விருப்பமில்லை. இருப்பினும் கட்சிகட்டுப்பாட்டுக்காக தொடர்கிறார் என்றார் அவர்.