சென்னை: குடிநீரை விற்பவர்களை கைது செய்ய கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் குடிநீரை விலைக்கு விற்கும் சமூகவிரோதிகளைக் கைது செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,மெட்ரோ வாட்டர் நிறுவனம் சென்னை நகர மக்களுக்கு குடிநீரை விநியோகித்து வருகிறது. இந்த குடிநீர்விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், விநியோகிக்கவும் மெட்ரோ வாட்டர் நிறுவனம் யாரையும் நியமிக்கவில்லை.

இதன் காரணமாக சமூக விரோதிகள், ரெளடிகள் தங்களது அரசியல் பின்னணியைப் பயன்படுத்திக் கொண்டுஇலவசமாக விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீரை விலைக்கு விற்கிறார்கள்.

ஒரு குடத்திற்கு குறைந்தது 1 ரூபாய் வசூலிக்கிறார்கள். இது தவிர ஒரு லாரி தண்ணீர் ரூ. 500க்கு விற்கப்படுகிறது.ஹோட்டல்களுக்கும், பொழுதுபோக்கு நிலையங்களுக்கும் இந்த இலவச தண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது.

இதைத் தடுத்து இலவசமாக விநியோகிக்கப்படும் தண்ணீரை விற்பவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார்

மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கியபெஞ்ச் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+