அமெரிக்காவில் மாணவியிடம் செக்ஸ் குறும்பு: இந்திய பேராசிரியருக்கு சிறை
வாஷிங்டன்:
அமெரிக்க பல்கலைக்கழக மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியப் பேராசிரியர் தெபசிஸ் செளத்ரிக்கு60 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவரிடம் பயின்ற மாணவி ஒருவர் அக்டோபர் 9ம் தேதி கல்வி தொடர்பான சில சந்தேகங்களுக்காகபல்கலைக்கழகத்தில் உள்ள இவரது அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது அந்த மாணவியை செளத்ரி கற்பழிக்க முயன்றார். இவரிடம் இருந்து தப்பிய மாணவி போலீசில் புகார்தந்தார். இதையடுத்து இவரை போலீசார் கைது செய்து லான்செஸ்டர் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இவர் மீதான விசாரணை தொடங்க இருந்த நிலையில், குற்றத்தை செளத்ரி ஒப்புக் கொண்டார்.மாணவியின் விருப்பத்தை மீறி அவளிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
இதையடுத்து இவருக்கு கடுமையான தண்டனை தருவதை தவிர்த்த நீதிபதி, 60 நாள் மட்டும் சிறையில் அடைக்கஉத்தரவிட்டார். ஏற்கனவே பல நாட்கள் இவர் காவலில் இருந்துவிட்டதால் 42 நாட்களில்விடுவிக்கப்பட்டுவிடுவார் என்று தெரிகிறது.
விசாரணையின்போது செளத்ரிக்காக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பேசுகையில், மாணவி அணிந்திருந்தமிக மோசமான உடை தான், பேராசிரியரைத் தூண்டுவிட்டுவிட்டது, எனவே மாணவி மீது தான் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு அதற்காக வருத்தமும் தெரிவித்த செளத்ரி தனது விசா வரும் மே 14ம்தேதியுடன் முடிவடைகிறது என்றும், அத்தோடு இந்தியாவுக்குத் திரும்பி தனது மனைவி, குழந்தையுடன்வாழ்க்கையைக் கழிக்க விரும்புவதாகவும் நீதிபதியிடம் கூறினார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என அரசு வழக்கறிஞரும்இறங்கி வந்தார். கற்பழிப்புக் குற்றத்துக்கு அமெரிக்காவில் 20 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications