ஊட்டியில் களை கட்டுகிறது குளு குளு சீசன்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

ஊட்டியின் குளு குளு சீசன் களை கட்டியுள்ளது. தாவறவியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான ரோஜாச்செடிகள் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.

அவ்வப்போது லேசான தூறலும், பகல் நேரத்தில் அதிகபட்சமாகவே 25 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் நிலவிவருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உதகை தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 20,000க்கும் மேற்பட்ட பல வகையான, பல வண்ண ரோஜாச்செடிகளும் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.இதில் 50 வகைச் செடிகள் புதிய வரவாகும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உதகை நகராட்சி நிர்வாகம் செய்திருந்தாலும்,விடுதிகளில் வாடகை தாறுமாறாக உயர்ந்திருப்பதால், தங்கியிருந்து உதகையின் அழகைப் பருக நினைத்துவருவோர் அதிர்ச்சியடைகின்றனர்.

இதனால் ஒரே நாளில் சுற்றிப் பார்த்துவிட்டு ஊர் திரும்பி விடுகின்றனர். விடுதிகளின் வாடகையை அரசேநிர்ணயம் செய்து அதை ஒரு கட்டுப்பாட்டில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.

அதே போல ஊட்டியிலேயே சில பகுதிகளில் தண்ணீர் பஞ்சமும் நிலவுவது இன்னொரு மைனஸ் பாயிண்டாகஉள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+