குமரியில் கன மழை: மின்னல் தாக்கி 3 பேர் பலி- உதகையில் கடும் காற்றில் வீழ்ந்தன மரங்கள்
நாகர்கோவி& ஊட்டி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த இடி, மின்னலுடன் கூடிய கடும் மழைக்கு 3 பேர் பலியாயினர்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே நேற்றிரவு கன மழை பெய்தது. இடி மின்னலுடன் சில மணி நேரம் பெய்தஇந்த பலத்த மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், திருவட்டாறு, குலசேகரம் என பல பகுதிகளிலும் கடும் மழை பெய்தது.
இதில், தக்கலை அருகே ரப்பர் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மின்னல் தாக்கிஉயிரிழந்தனர். இதேபோல, திருவட்டாறு பகுதியில் ஒருவரும் இடி தாக்கி இறந்தார்.
தரையில் வீழ்ந்த 150 வயது மரங்கள்:
அதே போல உதகமண்டலம் மலைப் பகுதியில்150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 2 மரங்கள், கன மழைகாரணமாக வேரோடு விழுந்தன.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காந்தி நகர் பகுதியில் பல பழமையான மரங்கள் கம்பீரமாக நின்றுகொண்டுள்ளன. இவற்றில் 2 மரங்கள் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வந்த கன மழையைத்தாங்காமல் சரிந்தன.
வேரோடு விழுந்த அந்த மரங்களை வனத்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த மரங்கள் 150ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.












Click it and Unblock the Notifications