5 மூட்டை சில்லரையுடன் வந்த சுயேட்சை!
சென்னை:
டெபாசிட் தொகையான ரூ. 10,000 தொகையை ஒரு ரூபாய் நாணயங்களாகக் கொண்டு வந்து கொடுத்து தேர்தல் அதிகாரியைஅதிர்ச்சியடைய வைத்தார் சுயேட்சை வேட்பாளர் தேவதாஸ் என்பவர்.
தென் சென்னை தொகுதிக்கான தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டி.பி.யாதவிடம், குப்பல்தேவதாஸ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
ஐந்து பெரிய சாக்கு மூட்டைகளை ஆள் வைத்து கொண்டு வந்த தேவதாஸ், அதை யாதவின் மேசை மீது வைத்தார்.
என்ன இது என்று யாதவ் கேட்டதற்கு டெபாசிட் தொகை ரூ. 10,000 சார் என்று கூறினார்.
அதிர்ச்சி அடைந்த யாதவ், இப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது. நோட்டுக்களாகத்தான் கொடுக்க வேண்டும். ஏராளமானவேட்பாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். சில்லறைகளை எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களிடம் என்னால் மாலை 3மணிக்குள் மனுக்களை வாங்க முடியாது.
இருந்தாலும் உங்களது வேட்பு மனுவை வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இந்த சில்லறைகளுக்குப் பதிலாக ரூபாய்நோட்டுக்களாகத் தந்த பிறகே வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்.
இதையடுத்து சில்லறை மூட்டைகளை அங்கேயே பத்திரமாக வைத்திருக்குமாறும், ரூபாய் நோட்டுக்களுடன் வருகிறேன் என்றுகூறிய தேவதாஸ் வேகமாக வெளியேறினார். மாலை 5 மணி வாக்கில் அவர் ரூபாய் நோட்டுக்களுடன் வந்து சேர்ந்தார்.
நூறு ரூபாய் நோட்டுக்களாக ரூ. 10,000 தொகையை அதிகாரியிடம் கொடுத்தார் தேவதாஸ். அதற்கான ரசீதைப் பெற்றுக் கொண்டபின் அங்கு வைத்து விட்டுச் சென்ற சில்லறை மூடைகளை ஆள் வைத்து அள்ளிக் கொண்டு போனார் குப்பல் தேவதாஸ்.
மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று, வேட்பாளர்களின் முற்றுகையால் டென்ஷனாக இருந்த தேர்தல் அலுவலர்களை சிறிதுநேரம் கலகலக்க வைத்து விட்டார் தேவதாஸ்.