For Daily Alerts
Just In
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு 752 பேர் வேட்பு மனு தாக்கல்
சென்னை:
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 752 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.கடைசி நாளான நேற்று மட்டும் 319 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந் நிலையில் நேற்று மட்டும் 319 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகளே.
நேற்று மனு தாக்கல் செய்தவர்களில் முக்கியமானவர் மதுரையில் போட்டியிடும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி.
மங்களூர் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலும் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொகுதியில் போட்டியிட17 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. 26ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். மே 10ம்தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, April 24, 2004, 5:30 [IST]