அதிமுகவுக்கு பிரசாரம் செய்யத் தயார்: திருநாவுக்கரசர்
நாகர்கோவில்:
அதிமுகவிலிருந்து அழைப்பு வந்தால் அக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயாராக இருப்பதாகமத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் திருநாவுக்கரசர்செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரதீய ஜனதாக் கட்சியின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். எனவே தேசியஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
பல்வேறு கருத்துக் கணிப்புகள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுள்ளன. ஆனால் ஒரு கருத்துக் கணிப்பில் கூட, பாஜகஆட்சிக்கு மீண்டும் வராது என்று கூறப்படவில்லை. இதிலிருந்தே பாஜகவுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு புரியும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே ந நீர் இணைப்பு குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு செயல் வடிவம்கொடுத்துள்ளது பிரதமர் வாஜ்பாய் மட்டுமே.
அதிமுகவிலிருந்து என்னிடம் ஆதரவு கேட்டோ, பிரசாரம் செய்ய வருமாறு கூறியோ அழைப்பு வரவில்லை. ஆதரவு கேட்டுஅழைப்பு வந்தால் நிச்சயம் பிரசாரம் செய்வேன் என்றார் திருநாவுக்கரசர்.