தினகரனிடம் இந்திய பாஸ்போர்ட்: தேர்தலில் போட்டியிட தடை இல்லை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் அக்காள் மகன் தினகரனிடம் இந்திய பாஸ்போர்ட்இருப்பதால் அவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட தடை இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெரியகுளம் தொகுதியில் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். இந் நிலையில் தேர்தல் ஆணையத்தில் ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி ஒரு புகார் கொடுத்தார்.
அதில், தினகரனுக்கு சிங்கப்பூர் குடியுரிமை உள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்று தினகரனே தன்னைப் பற்றி நீதிமன்றம்ஒன்றில் கூறியுள்ளார். எனவே, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அவர் போட்டியிடவோ, ஓட்டுப் போடவே தகுதி இல்லைஎன்று தனது புகாரில் சுவாமி கூறியிருந்தார்.
இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், தினகரனின் பாஸ்போர்ட்உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில் அவர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர் என்று தெரிய வருகிறது.பெரியகுளம் தொகுதியில் போட்டியிட தினகரனுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.
இதனையடுத்து இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு, தன்னை சிங்கப்பூர் பிரஜை என்று சொல்லி, அன்னியசெலாவணி வழக்கில் இருந்து தினகரன் தப்ப முயன்றது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடப் போவதாகசுப்பிரமணியம் சுவாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications