வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: உண்ணாவிரதத்தில்இறங்கிய பெண கவுன்சிலர்
கரூர்:
வாக்காளர் பட்டியலிலிருந்து தனது குடும்பத்தினரின் பெயர் நீக்கப்பட்டிருந்ததால், அதைக் கண்டித்து கரூர் பெண் கவுன்சிலரானமலர்க்கொடி தனது குடும்பத்துடன் நகராட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
கரூர் நகராட்சியில் வார்டு கவுன்சிலராக இருப்பவர் மலர்க்கொடி. இவரது பெயரும், கணவர் மற்றும் குடும்பத்தினர் பெயர்கள்வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதையடுத்து உரிய படிவம் கொடுத்து தங்களது பெயர்களை பட்டியலில் சேர்க்கக்கோரியிருந்தனர்.
இருப்பினும் நேற்று வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலிலிலும் மலர்க்கொடியின் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால் கோபமடைந்த மலர்க்கொடி, கணவர் கதிரவன் மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் நகராட்சிஅலுவலகத்திற்குள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மலர்க்கொடிக்கு ஆதரவாக அப் பகுதி பொது மக்கள் நகராட்சி அலுவலகம் முன்கூடினர்.
இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மலர்க்கொடியுடன் சமாதானப் பேசினர்.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி மொழி அளித்ததையடுத்துஉண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார் மலர்க்கொடி.












Click it and Unblock the Notifications