மதுரை காமராஜர் பல்கலை: மேலும் 6 வினாத்தாள்கள் லீக்!
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பிபிஏ மற்றும் பி.எஸ்சி பட்டப் படிப்புகளின் செமஸ்டர் தேர்வுக்கான மேலும் 6 வினாத்தாள்கள் லீக் ஆகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதி நடக்கவிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பிகாம் மற்றும் பிஎஸ்சி தேர்வுகளுக்கான இரண்டுவினாத்தாள்கள் முன் கூட்டியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்தத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. வினாத் தாள் லீக் குறித்து நடப்பட்ட விசாரணையில் பெரியகுளத்தில்உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 2 ஊழியர்கள் சிக்கினர்.
அவர்கள் காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துளள, மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள பிபிஏ, பிஎஸ்சி பட்டப் படிப்புகளுக்கான 6 வினாத்தாள்களையும் அவர்கள் லீக் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 2 ஊழியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் இந்த 6 தேர்வுகளும் கூட ரத்தாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications