தமிழகத்தில் 127 வேட்பு மனுக்கள் தள்ளுபடி: களத்தில் 619 பேர்
சென்னை:
தமிழகத்தில் 39 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 127 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டனன.இதையடுத்து 619 வேட்பாளர்கள் மட்டுமே இப்போது களத்தில் உள்ளது.
வரும் மே 10ம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள்நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், முறையாக தாக்கல் செய்யப்படாத மனுக்கள், போதிய ஆவணங்கள் வைக்கப்படாத மனுக்கள், டெபாசிட் தொகைசெலுத்தப்படாத மனுக்கள் ஆகியவை நிராகக்கப்பட்டன. மொத்தம் 127 மனுக்கள் நிராகக்கப்பட்டன. இதில்பெரும்பான்மையானவை சுயேச்சைகளின் மனுக்களே.
இதையடுத்து 619 வேட்பாளர்களின் மனுக்கள் போட்டிக்குத் தகுதியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவன் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் நாளை மறுநாளுக்குள் (27ம் தேதி) வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.












Click it and Unblock the Notifications