வசந்த்குமார், கெளரிசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை- காங். தலைமை அறிவிப்பு
டெல்லி:
திருநெல்வேலி தொகுதியில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு எதிராக வேட்பு மனுத் தாக்கல்செய்துள்ள வசந்தகுமார் மீதும், சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளகெளரிசங்கர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
திருநெல்வேலி தொகுதியில் சீட் கேட்டு கிடைக்காத கோபத்தில் அங்கு சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்வசந்தகுமார். கட்சி மேலிடம் கூறியதால்தான் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் வசந்தகுமார் கூறியதால் கட்சியில் குழப்பம்ஏற்பட்டது.
இதேபோல, சிவகங்கை தொகுதி கிடைக்காத கோபத்தில் அங்கு சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் காங்கிரஸ்பிரமுகரான கெளரிசங்கர்.
இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் கபில்சிபல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருநெல்வேலியில் வேட்பு மனு தாக்கல் செய்யும்படி வசந்தகுமாருக்கு கட்சித் தலைமை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.அவராகவே மனு தாக்கல் செய்துள்ளார். அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வசந்த்குமார்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, சிவகங்கை தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ள கெளரிசங்கர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.