11 பிகார் சிறுவர்கள் சென்னையில் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமோசா வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த பிகாரைச் சேர்ந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பிகாரைச் சேர்ந்தவர் பிரசாத். இவரும் இவரது மனைவி மம்தா தேவியும் சென்னையில் சமோசா வியாபாரம் செய்துவந்தனர். இவர்களது நிறுவனத்தில் பீகாரைச் சேர்ந்த 11 சிறுவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்து வேலையில்ஈடுபடுத்தினர்.
இந்த சிறுவர்கள் அடித்தும், உதைத்தும் பிரசாத், மம்தா தேவி கொடுமைப்படுத்துவதாக தி.நகரில் உள்ள அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று 11சிறுவர்களையும் மீட்டனர். பிரசாத் கைது செய்யப்பட்டார், மம்தா தேவி தலைமறைவாகி விட்டார்.
11 சிறுவர்களும் பிகார் மாநிலம் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அனைவரும் அவர்களது சொந்த ஊருக்குஅனுப்பி வைக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications