For Daily Alerts
Just In
சந்திர கிரகணம்: 4ம் தேதி இரவு திருப்பதி ஆலயம் மூடல்
திருப்பதி:
சந்திர கிரகணம் காரணமாக வரும் 4-ம் தேதி இரவு முதல் 5-ம் தேதி காலை வரை திருப்பதி கோவில்மூடப்படவுள்ளது.
அடுத்த மாதம் 4ம் தேதி நள்ளிரவு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கோவில்களில் பூஜைகள் ரத்துசெய்யப்படுவதோடு நடை சாத்தப்படுகின்றன.
திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் 4ம் தேதி இரவு 7.30 மணி முதல் 5-ம் தேதி காலை 4 மணி வரை மூடப்படும்என்று அக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்காரம், 5ம் தேதி சுப்ரபாதம், அர்சானனந்த தரிசனம் ஆகியவை நடக்காது.
அங்கப் பிரதட்சணமும் நடக்காது. இந்தக் கால கட்டத்தில் கோவிலுக்குள் பக்தர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் மற்ற பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, April 26, 2004, 5:30 [IST]