நெல்லையில் போட்டியில்லை: வசந்த்குமார் பல்டி
திருநெல்வேலி:
நெல்லைத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு தலைவர்வசந்த்குமார் கூறியுள்ளார்.
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு எதிராகவேட்பு மனுத் தாக்கல் செய்தார் வசந்தகுமார். இதனையடுத்து கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்கபில் சிபல்,
வேட்பு மனு தாக்கல் செய்யும்படி வசந்தகுமாருக்கு கட்சித் தலைமை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.அவராகவே மனு தாக்கல் செய்துள்ளார். அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவசந்த்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந் நிலையில் தனது மனுவை வாபஸ் வாங்கப் போவதாக வசந்த்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கூறுகையில், தனுஷ்கோடி ஆதித்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்படும் வாய்ப்பிருந்ததால், கட்சி மேலிடத்தின்உத்தரவுப்படி மனுத் தாக்கல் செய்தேன்.
இப்போது ஆதித்தனின் மனு ஏற்கப்பட்டுவிட்டதால் எனது மனுவை வாபஸ் பெறுவேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications