பாலகங்கா மீதான வழக்குகள் வாபஸ்; எதிர்த்து உயர் நீதீமன்றத்தில் திமுக மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் பாலகங்கா மீது போடப்பட்டிருந்த 2 வழக்குகளை தமிழக அரசு வாபஸ்பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது,பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்டவை 2 வழக்குகள் பாலகங்கா மீது சென்னை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.

இந் நிலையில் பாலகங்கா மீதான 2 வழக்குகளையும் தமிழக அரசு திடீரென்று வாபஸ் பெற்று விட்டது. கடந்தமாதம் ஒரு வழக்கும், இந்த மாதம் 19ம் தேதி ஒரு வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. பாலகங்கா தேர்தலில்போட்டியிடுவதற்கு சாதகமாகவே இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாக பேச்சு எழுந்துள்ளது. இந் நிலையில்திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுவை தாக்கல்செய்துள்ளார்.

அதில், குற்றவியல் சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக இரு வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.எனவே இந்த உத்தரவை செல்லாது என்று ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தவழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+