எம்.பி.பி.எஸ், பி.இ படிப்பு: சுயநிதி கல்லூரிகளில் தனி நுழைவு தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேர விரைவில் தனியாக நுழைவுத் தேர்வுநடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் சங்க தலைவர் டாக்டர் டி.டி.நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப விரைவில் நாடு முழுவதும்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

மாணவர்கள் எளிதாக வந்து தேர்வு எழுதும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தாவரவியல், விலங்கியல்,இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுநேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.

இதில் தேர்வான மாணவர்கள் இந்தியா முழுவதும் எந்தக் கல்லூரியிலும் சேரலாம். தேர்வு தேதி விரைவில்அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் இணையதளத்திலும், வங்கிகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் நலன் கருதிவிண்ணப்ப கட்டணம் ரூ.100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வினாத்தாள்வைக்கப்பட்டிருக்கும். தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் பெட்டகம் திறக்கப்பட்டு வினாத்தாள்பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+