தமிழகம் வந்தது மத்திய போலீஸ் படை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள மத்திய போலீஸ் படையின் முதல் பிரிவு இன்று சென்னைவந்தது.

தமிழகத்தில் 23 தொகுதிகள் மிகவும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு தமிழககாவல்துறையினருடன் சேர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட 6000 மத்திய காவல்துறையினர் தமிழகம்வரவுள்ளனர்.

அதன்படி முதல் கட்டமாக இன்று 80 மத்திய படையினர் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் பேருந்து மூலம்கடலூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் கர்னூலில் நிலை கொண்டுள்ள மத்தியபடையினர் தனி ரயில் மூலம் நாளை சென்னை வருகிறார்கள்.

அவர்களில் ஒரு பிரிவினர் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். தென் மாவட்டங்களில் பதற்றமானபகுதிகளில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதற்கிடையே, சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் இன்றுதொடங்கியது. மொத்தம் 14 மையங்களில் 10,300 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாக வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+