For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரசிகர்களுக்கு பாதுகாப்பு: தேர்தல் ஆணையத்திடம் ரஜினி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தூண்டுதலின் பேரில் அவரது கட்சித் தொண்டர்கள், எனது ரசிகர்களை தாக்கிவருகின்றனர். எனவே, பா.ம.கவினரிடம் இருந்து எனது ரசிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றுநடிகர் ரஜினி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை பிளஸ் புகார் மனு கொடுத்துள்ளார்.

ரிஷிகேஷில் இருந்து டெல்லி வந்த ரஜினி, தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்துப்பேசினார். பின்னர் அவரிடம் மனுவைத் தந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த ரஜினி பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேர்தல் முடிந்த பின்னும் எனது ரசிகர்களைத் தாக்க ராமதாஸ் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக தேர்தல்ஆணையத்தில் புகார் கொடுக்க வந்தேன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுப்பது இன்னும் யோசிக்கவில்லை. சென்னை திரும்பிய பின்நண்பர்களுடன் பேசி விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.

இந்தத் தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்கவில்லை (!). எனது நிலையை ஏற்கனவே நான் தெளிவாகக் (!!!) கூறிவிட்டேன். இனி எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளது.

நான் அரசியலில் சேருவேனா, இல்லையா என்பது இப்போதைய பிரச்சனை அல்ல என்றார் ரஜினி.

மாலையில் சென்னை புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் பிரச்சாரத்துக்கு வருமாறு ரசிகர்கள் அழைக்கின்றனர். அதுகுறித்து அந்தத் தொகுதிகளின் ரசிகர்களுடன் பேசிய பின் யோசிப்பேன் என்றார்.

இந் நிலையில் ரஜினி தந்த புகார் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், ரஜினியின்கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X