திருச்சி: நகை வியாபாரிகளிடம் ரூ. 20 லட்சம் தங்க கட்டிகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மதுரையைச் சேர்ந்த இரண்டு நகை வியாபாரிகளிடம் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள்கொள்ளையடிக்கப்பட்டன.
மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் மற்றும் கண்ணன். இருவரும் நகை வியாபாரிகள். இருவரும் சென்னைக்குவந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு ஹெளரா ரயில் மூலம் திருச்சி சென்றனர்.
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி பஸ் நிலையத்திற்கு அவர்கள் நடந்து சென்றபோது ஒரு காரில்வந்தவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். இதில் கண்ணனை மட்டும் நடுவழியில் காரிலிருந்துதள்ளிவிட்டனர்.
காயமடைந்த கண்ணன், பின்னர் இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தல்காரர்களைத் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications